முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் அலுவலகத்திலுள்ள கழிவறையில் இருந்து எரிபொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, அலுவலக கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், 10 லிட்டர் பெட்ரோல், 10 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 50 லிட்டர் டீசல் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், இது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share.
Exit mobile version