நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரம் அல்லது QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த நடைமுறை தவிர்ந்த ஏனைய அனைத்து திட்டங்களும் இரத்து செய்யப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் இருப்புகளை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version