அனுமதிப்பத்திரமின்றி, பாதுகாப்பற்ற முறையில், எரிபொருளை சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் வெயாங்கொடை – நயிவல பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் 71 லீற்றர் டீசலும், 105 லீற்றர் பெற்றோலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம், சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து வைத்திருந்த 24 பேர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து, 6,610 லீற்றர் டீசலும், 606 லீற்றர் பெற்றோலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version