2022 ஜூலை மாதம் நிலவரப்படி, உலகம் முழுவதும் 15,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கம்மை நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள் (CDC) தெரிவிக்கின்றன.

உலக சுகாதார அவசரநிலை என உலக சுகாதார அமைப்பு WHO வகைப்படுத்த வேண்டுமா என்று விவாதிக்க குரங்கம்மை நோய் நிபுணர்கள் வியாழக்கிழமை சந்தித்தனர். இதன்பிறகு, குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது.

சாவோ பாலோவில் வசிக்கும் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரான தியாகோ, அதிக காய்ச்சல், சோர்வு, நடுக்கம் மற்றும் உடல் முழுவதும் புண்கள் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, அவர் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் என்பதை அறிந்தார்.

ஆனால், அவரது ஆணுறுப்பு பகுதியில் வலி, வீக்கம் மற்றும் எரியும் உணர்வு இருப்பதே அவரது முக்கிய பிரச்சினை. அந்த உறுப்பில் குறைந்தது ஒன்பது தோல் புண்கள் தோன்றின.

“இது மிகவும் வலிக்கும்; அரிப்பு எடுக்கும்,” என்று அவர் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார். “எல்லா பாகங்களும் மிகவும் வீங்கியிருக்கிறது. சில சமயங்களில் அது தீயில் எரிவது போல் இருக்கும்.”

பெரியம்மை பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸால்தான் குரங்கம்மையும் ஏற்படுகிறது, ஆனால் பெரியம்மை மிகவும் குறைவான தீவிரத்தன்மை கொண்டது. இது குரங்கு, எலி அல்லது அணில் போன்ற பாதிக்கப்பட்ட விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவும்.

மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட நபருடன் யாராவது நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது அப்படி ஏற்படலாம்.

தோலில் கீறல், சுவாசக்குழாய், கண்கள் மற்றும் வாய் வழியாக இந்த தொற்று பரவுகிறது.

குரங்கம்மை பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் ஆடைகள், படுக்கை அல்லது துண்டுகளைத் தொடுவதும் நோய் பரவும்.

தியாகோவின் அறிகுறிகள் ஜூலை 10ம் தேதி அன்று தொடங்கியது. “முதலில் நான் கடுமையான குளிரை உணர்ந்தேன், அதைத் தொடர்ந்து அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் பொதுவாக ஏற்படும் அசெளகரியம் ஏற்பட்டது. என் உடல் முழுவதும் நொறுங்கியதைப் போல் உணர்ந்தேன்,” என்று அவர் கூறுகிறார்.

“இது காய்ச்சலாகவோ அல்லது கோவிட் -19ஆகவோ இருக்கலாம் என்று நான் நினைத்தேன், ஆனால் அடுத்த நாள், நான் குளிக்கும்போது, ​​​​என் முதுகிலும் ஆண்குறியிலும் புண்கள் இருப்பதை முதலில் கவனித்தேன்.”

அப்போது முதல், தியாகோ தனது கால்கள், தொடைகள், கை, வயிறு, மார்பு, முகம் மற்றும் ஆணுறுப்பில் புண்கள் இருப்பதைப் பார்த்தார்.

“இது கிட்டத்தட்ட வீங்கிய, வலிமிகுந்த பருக்கள் போன்றது,” என்று அவர் கூறுகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு அவர் தொடர்பு கொண்ட நண்பருக்கு குரங்கம்மை பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அறிகுறிகள் தென்பட்ட மூன்றாவது நாளில் அவர் மருத்துவமனைக்குச் சென்றார்.

ரத்த பரிசோதனையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான பரிசோதனை மேற்கொண்டார். அது நெகட்டிவ் என்று வந்தது.

“மருத்துவமனைக்கு செல்ல எனக்கு சில நாட்கள் பிடித்தது. ஏனென்றால் வலி மிகவும் கடுமையானதாக இருந்ததால், ஆடைகளை அணிய முடியாமல் இருந்தது. . கார் பயணம் கூட வலியையும் வீக்கத்தையும் மிகவும் மோசமாக்கியது.

“மருத்துவமனையில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அழற்சி எதிர்ப்பு, வலி ​​மருந்து மற்றும் ஒரு மயக்க மருந்து, இது எரிச்சல் ஏற்படும் உணர்வை போக்கியது” என்கிறார்.

அந்த மருத்து உதவுகிறது. ஆனால் நான்கு மணி நேரம் கழித்து, அது வேலை செய்வது நின்றுவிடும் மற்றும் வலி மீண்டும் ஏற்படும்,” என தியாகோ மேலும் கூறுகிறார்.

அவரும் அவரது நண்பரும் சமீப காலமாக பிரேசிலை விட்டு வெளியே வரவில்லை.

“நான் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவுடன், முந்தைய சில நாட்களில் நான் தொடர்பு கொண்ட நண்பர்களை அழைத்து, எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை பற்றி அவர்களிடம் கூறினேன்,” என்று அவர் கூறுகிறார். இந்த போராட்டங்களுடன், தியாகோ மருத்துவமனையில் தான் கடினமான தருணங்களைச் சந்தித்ததாக கூறுகிறார்.

“புண்களை எவ்வாறு சுத்தம் செய்வது, எவ்வளவு காலம் நான் நோய்வாய்ப்பட்டிருப்பேன் அல்லது எப்போது தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வர முடியும் என்பது பற்றி எனக்கு எந்த தகவலும் தரவில்லை. இந்த தகவலை நான் இணையத்தில் பார்க்க வேண்டும் அல்லது மருத்துவ நண்பர்களிடம் கேட்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

“குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மையம் எதுவும் இல்லை. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இந்த சூழ்நிலையை சமாளிக்க அவர்கள் தயாராக இருப்பதாக நான் உணரவில்லை” என்று தியாகோ மேலும் கூறுகிறார்.

டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் “முரட்டுத்தனமாகவும், அவமதித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நான் சென்ற மருத்துவமனையில் எல்லா இடங்களிலும், நான் எச்.ஐ.வி பாசிட்டிவ்வா அல்லது எனக்கு வேறு ஏதேனும் பாலியல் ரீதியாக தொற்று இருக்கிறதா என்று கேட்கப்பட்டது.” என்கிறார்.

எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ) சமூகத்தில் உள்ளவர்களிடையே இந்த நோய் அதிகம் பரவுவதாக ஒரு கூற்று இருப்பதால் அது தொடர்பாக நான் அவமானப்படுத்தப்பட்டேன்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும் ஆண்களில் பாலியல் சுகாதார மருத்துவமனைகள் மூலம் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீங்கள் தொடர்பு கொண்டால் யாருக்கும் இந்த நோய் வரக்கூடும் என்று இந்த அமைப்பு எச்சரிக்கிறது.

பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் சமீபத்திய பாதிப்புகளில் “குறிப்பிடத்தக்க விகிதத்தில்” தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் மற்றும் இருபாலின ஆண்களிடம் கண்டறியப்பட்டுள்ளன.

ஆகவே, அறிகுறிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும், தேவைப்பட்டால் உதவியை நாடவும் நாங்கள் அவர்களுக்கு குறிப்பாக அறிவுறுத்துக்கிறோம்,” என்று பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.

பொதுவாக மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் மேலும் குறிப்பாக மழைக்காடு பகுதிகளில் காணப்படுகிறது.

அடர்ந்த காடுகளைக் கொண்ட காங்கோ ஜனநாயகக் குடியரசில், இந்த ஆண்டு மட்டும் 1,200 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 2022 மே 1ம் தேதி வரை 57 இறப்புகள் பதிவாகியுள்ளன என்ற உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வைரஸின் இரண்டு முக்கிய விதங்கள் உள்ளன. அவை மேற்கு ஆப்பிரிக்க மற்றும் மத்திய ஆப்பிரிக்க இருப்பதாக அறியப்படுகிறது, இது மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பாதிப்பு சற்றே வலு குறைந்தது. இது இப்போது உலகின் பிற பகுதிகளில் பரவுகிறது.

வழக்கத்திற்கு மாறாக, இந்த பிராந்தியத்திற்கு எந்த பயண இணைப்புகளும் இல்லாத நிலையில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது வைரஸ் இப்போது சமூகத்தில் பரவுகிறது.

பிரிட்டன் ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி கூறுகையில், தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என்று கவலைப்படுபவர்கள் தங்கள் உள்ளூர் பாலியல் சுகாதார கிளினிக்கைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் வருகைக்கு முன்னதாக அழைக்கவும் அல்லது மின்னஞ்சல் செய்யவும்”, என தெரிவிக்கிறது.

நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் அறிகுறிகள் இருக்கும் போது உடலுறவு கொள்ள வேண்டாம் என்றும், நோய்த்தொற்று ஏற்பட்ட எட்டு வாரங்களுக்கு முன்னெச்சரிக்கையாக ஆணுறைகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.

வைரஸின் பெரும்பாலான பாதிப்புகள் மிதமானவை. சில சமயங்களில் சின்னம்மை போலவே இருக்கும். மேலும் சில வாரங்களில் அவை தானாகவே மறைந்துவிடும்.

ஆனால், குரங்கம்மை சில சமயங்களில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம். உலக சுகாதார அமைப்பு இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து இறப்புகளும் ஆப்பிரிக்க நாடுகளில் பதிவு செய்யப்பட்டவை.

நோய்த்தொற்றுக்குப் பிறகு, முதல் அறிகுறிகள் தோன்றுவதற்கு வழக்கமாக 5 முதல் 21 நாட்கள் ஆகும்.

தோல் பகுதியில் வெடிப்பு தோன்றும், பொதுவாக முகத்தில் தொடங்கி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு, குறிப்பாக கைகள் மற்றும் கால்களில் பரவுகிறது.

அடிக்கடி மிகவும் எரிச்சலூட்டும், வலிமிகுந்ததாக இருக்கும் இந்த வெடிப்பு , மாறும். அது வெவ்வெறு நிலைகளுக்கு செல்லும், – சிக்கன் பாக்ஸ் போன்றது – ஒரு சிரங்கு உருவாவதற்கு முன், மற்ற சிரங்கு விழும்.

இந்த தொற்று பொதுவாக 14 முதல் 21 நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது.

Share.
Exit mobile version