வீட்டில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்களை சேமித்து வைத்திருந்த நபர் கைது

கினிகத்தேன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் சட்டவிரோதமான முறையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரின் வீட்டில் இருந்து 230 நிரப்பப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 3 வெற்று சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

52 வயதான சந்தேக நபர் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share.
Exit mobile version