அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சாந்த பண்டாரவின் வீட்டை நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளது.

மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகிய போதிலும், பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு அவர் எடுத்த தீர்மானம் தொடர்பில் அதிருப்தி தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சரின் வீட்டைச் சுற்றி வளைத்திருந்தனர்.

சொத்தை சுற்றி வளைத்த அமைச்சரை அவரது இல்லத்தை விட்டு வெளியேறுமாறு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share.
Exit mobile version